வேலைக்காக நம்பி சென்றேன்… மிரட்டி வீடியோ எடுத்தனர் : திருமணமான பெண் கண்ணீர்!!

895

தமிழகத்தில் திருமணமான பெண்ணை வேலை தருவதாக கூறி, வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கடந்த 10-ஆம் திகதி தன் கணவருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரை படித்துப் பார்த்த காவல் கண்காணிப்பாளர் அதிர்ச்சியடைந்தார். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் என் கணவர் வேலை காரணமாக கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்று விட்டார்.

அப்போது தான் சம்பாதிக்கும் பணத்தை போட்டுவிடுவதாக கூறினார். இதனால் அதற்காக வங்கிக் கணக்கை துவங்குவதற்காக சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கச் சொன்னார்.

அதன்படி நான் வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கினேன். அப்போது, அங்கிருந்த வங்கி ஊழியர் முத்துசிவகார்த்திக், ஏ.டி.எம் கார்டு வந்ததும் அழைக்கிறேன். உங்கள் நம்பரைக் கொடுங்கள் என்றார், நானும் நம்பி கொடுத்துச் சென்றேன். அதன் பின் ஒரு நாள் என்னை போனில் தொடர்பு கொண்ட அவர்,

பி.காம் படித்திருக்கும் உனக்கு எங்களது வங்கியில் தற்காலிக வேலை இருக்கிறது அதனை வாங்கிக் கொடுக்கிறேன், அதற்காக வங்கி ஊழியர்களை நீ சந்திக்க வேண்டும் என்று கூறி, கம்பத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றுக்கு வரச்சொன்னார். என் குடும்பச் சூழல் காரணமாக எப்படியாவது இந்த வேலை கிடைத்தால் போதும் எனக் கருதி அங்கு சென்றேன்.

அப்போது அறைக்குள் சென்றதும் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்தார். அதைத் தனது செல்போனில் காணொளியாகப் பதிவுசெய்துகொண்டார். தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த வீடியோவை எனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி என்னை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்புணர்வுசெய்தார்.

ஒரு கட்டத்தில், அவருடன் வங்கியில் பணிபுரியும் அன்பு, பாண்டி, சதீஸ் மற்றும் பெயர் தெரியாத மூவருக்கு அனுப்பி, அந்த ஆறு பேரை அழைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்து, என்னைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார்கள். என்னை விட்டுவிடுங்கள் எனப் பல முறை கெஞ்சியும் பார்த்தேன்.

ஆனால், நான் சொல்வதை கேட்காமல், முத்துசிவகார்த்தியின் நண்பன் ராஜபார்த்திபன் மற்றும் வங்கி ஊழியர்கள் இருவர் உட்பட, மூவர் என்னை தேக்கடி உட்பட பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர்.

அப்போதெல்லாம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதனை என் கணவரிடமோ, பெற்றோரிடமோ சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டினார்கள்.

இவர்களிடம் இருந்து தப்பிக்க போடி சிலமலையைச் சேர்ந்த எனது உறவினரான போஸ் என்பவரது மகன் ஈஸ்வரனிடம் நடந்த விடயம் அனைத்தையும் கூறினேன். எனக்கு உதவி செய்வதைப் போல நடித்து, அவனும் என்னை பாலியல் வன்புணர்வு செய்தான்.

அதோடு, பெயர் தெரியாத அவனது நண்பனை அழைத்துவந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்து அதை செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துகொண்டான்.

கடந்த 2018 ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை 12 பேரும் என்னை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் என் உடல் நிலை மோசமாகச் சென்றதால், அதனை அறிந்த என் கணவர், எனது மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளைப் பார்த்து என்னுடன் சண்டைபோட்டார்.

அதன்பின்னர் நடந்ததைக் கூறினேன். என்னை பாலியல் வன்புணர்வு செய்த 12 பேர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக, 2018 டிசம்பர் மாதம் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. அதன் பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் இப்போது எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். 12 பேருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த துணை மேலாளரான போடியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக் (30), சிலமலையைச் சேர்ந்த ஈஸ்வரன் (30) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.