பயணிகளுடன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து 25 உடல்கள் மீட்பு!!

362

பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாரிலிருந்து கடகுஷானி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்தே இவ்வாறு பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக குலு மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த 25 மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.