கழிப்பறை அருகில் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!!

1044

மாணவிக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கழிப்பறைக்குள் செல்ல முயன்ற நிலையில் அவர் தாழ்ந்த சாதி என கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பனாராஸ் பல்கலைக்கழகம். இங்கு படிக்கும் மாணவி அங்குள்ள கழிப்பறைக்குள் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அவரை தடுத்த காவலர்கள், நீ கழிப்பறைக்குள் செல்லக்கூடாது, வேறு எங்காவது சென்று அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தி கொள் என கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக பல்கலைகழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.

புகாரில், சாதி அடிப்படையில் பாகுபாடு பார்த்து என்னை கழிப்பறைக்குள் அனுமதிக்க மறுத்தனர். இது மனித தன்மையற்றது மற்றும் சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து குறிப்பிட்ட காவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாணவி ஒருவர் சாதி பாகுபாடு பார்க்கப்பட்டு கழிப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.