வெளிநாட்டில் இருந்து மனைவியின் பிரசவத்துக்காக வந்த கணவன் : நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்!!

1711

கனவிலும் நினைக்காத சம்பவம்

சென்னையை சேர்ந்கனவிலும் நினைக்காத சம்பவம்த மென்பொருள் பொறியாளர் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டு, அவரது ச டலம் ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரத்தைச் சேர்ந்தவர் சையத் தன்வீர் அகமத் ( 35). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்த மதுரையைச் சேர்ந்த ஷில்பா (32) என்பவருடன் காதல் ஏற்பட்டது. 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.

ஷில்பா மதுரையில் பிறந்தாலும், பின்னர் பெங்களூரு ராஜாஜி நகரில் வளர்ந்தவர் ஆவார். ஷில்பாவின் தாய் பிரிக்கெட் சத்தியராணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

அகமத்-ஷில்பாவின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு அகமத் அயர்லாந்தில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்தார்.

ஷில்பாவும் கணவருடன் தங்கி வேலை செய்து வந்த நிலையில் 7 மாத கர்ப்பமாக இருந்தார். இதனால் அவரை பிரசவத்திற்கு தாய் வீட்டில் விடுவதற்காக அகமத், ஷில்பாவை அழைத்துக்கொண்டு ராயக்கோட்டைக்கு வந்தார். பின்னர் ஷில்பாவின் தாயார் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 12ம் திகதி அதிகாலை பெங்களூருவுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு அகமத் சென்றார். பின்னர் தான் ஓசூர் வந்து விட்டதாக அன்று மாலை 4 மணி அளவில் மெசேஜ் செய்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஷில்பா கடந்த 13ம் திகதி பொலிசில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ராயக்கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் அகமது சட லமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதி பயங்கர ஆ யுதங்களால் தாக்கப்பட்டும், உடலில் பல இடங்களில் ரத் தமாகவும் இருந்தது. இதுபற்றி பொலிசார் நடத்திய விசாரணையில் அகமத் காதல் திருமணம் செய்ததால் அவரது குடும்பத்துடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பெங்களூருவில் அவர் ரூ.1½ கோடிக்கு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இந்த நிலையில் தான் அவர் கடத்தி கொ லை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அகமத்தை கொ லை செய்தவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.