தோல் சுருக்கத்தை போக்க வேண்டுமா? இருக்கே திராட்சை மசாஜ்!!

1087

வெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சரும வறட்சி, ஈரப்பதம் இழப்பு, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.இந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம்.

நான்கு முதல் ஐந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு திராட்சை பழங்களை சேர்த்து கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஒப்பனை செய்ய பயன்படுத்தும் பிரஸ் மூலம் கூழை முகத்தில் அழுத்தமாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

அகலமான கிண்ணத்தில் ஒரு தக்காளி பழம் மற்றும் 10 திராட்சை பழங்களை போட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். பிரஸ் மூலம் கருவளையங்கள் உள்ள பகுதியில் கலவையை அழுத்தமாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இந்த மசாஜ் செய்து வரலாம். சருமம் பளிச்சென்று காட்சி தரும்.