பேய் பங்களாவில் வசிக்கும் இளவரசர் ஹரி- மெர்க்கல்: மகாராணியின் திருமண பரிசு?

625

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவியுமான மெர்க்கல் பேய் பங்களாவில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காரணம் இவர்கள் வசிக்கும் இடம் பார்ப்பதற்கு ஒரு திகில் இடம்போன்று காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல், அங்கு அமானும்ஷய சத்தங்கள் எழுந்துள்ளதாக இதற்கு முன்னர் வாழ்ந்த அரச குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.

ஹரியும் மெர்க்கலும், பிரித்தானிய மகாராணியின் கெசிங்கடன் அரண்மனையில் உள்ள Nottingham Cottage – இல் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களை இருவரும் அங்கு தங்க வேண்டும் என மகாராணி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், Nottingham Cottage பார்ப்பதற்கு அறுவறுப்பாகவும், திகில் நிறைந்த பகுதி போன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இருப்பிடத்திற்கு முன்னர் ஒரு சிறிய ஆறு இருக்கிறது.

இந்த Nottingham Cottage – ஐ அரச குடும்பத்தினர் அனைவரும் வெறுக்கிறார்கள். இங்கு இருப்பதற்கு அரச குடும்ப உறுப்பினர்கள் யாரும் முன்வரவில்லை. சிறு வயதில், மோசமான சம்பவங்களை எதிர்கொண்டதாக இங்கு வாழ்ந்த அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Queen Victoria labelled இங்குதான் வசித்தார். சிறிய அறைகள், முரட்டுத்தனமான தாழ்வாரங்கள் மற்றும் தேவையற்ற ஒசைகள் என அனைத்தும் தெய்வீகத்தன்மைக்கு எதிர்மாறாக இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த Nottingham Cottage சுமார் 33 ஆண்டுகள் பழமையானது. இளவரசர் எட்ரி கிளாரன்ஸ் டியூக், திடீரென்று தனது 28 வயதில் இங்கு வசித்தபோதுதான் இறந்தபோனர்.

இப்படி, பல்வேறு மர்மங்கள் நிறைந்த இடத்தில், ஹரி தனது காதலியுடன் வசித்து வருகிறார். மேலும், இதனை ஹரி மெர்க்கலுக்கு திருமண பரிசாக பிரித்தானிய மகாராணி கொடுத்துள்ளாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.