திருமணமான ஒரு வாரத்தில் கணவன் அருகில் சோ கமாக உட்கார்ந்திருந்த புதுப்பெண் : நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!

456

இந்தியாவில் திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை க ழுத்தறுப்பட்டு உ யிருக்கு போ ராடி வரும் சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் அச்சுடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் (22). இவரும் புஷ்பலதா (19) என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலை அறிந்த புஷ்பலதா குடும்பத்தார் அதற்கு எ திர்ப்பு தெரிவித்தனர்.

ஏனெனில் கல்யாண் ஓட்டுனர் பணி செய்து வந்ததால் அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

கல்யாண் மற்றும் புஷ்பலதா இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட இரு வீட்டாரும் அவர்களுடன் சமாதானம் பேசி தங்களிடம் வந்தால் ஊர் அறிய பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைப்போம் என கூறி அவர்களை வரவழைத்தனர்.

இதையடுத்து கல்யாண் மற்றும் புஷ்பலதா அவர்களிடம் வந்த போது அனைவரும் திருமணத்தை மீண்டும் பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.

அப்போது புஷ்பலதாவின் உறவினர் ரவி தி டீரென தான் வைத்திருந்த க த்தியால் கல்யாண் க ழுத்தை அ றுத்துவிட்டு த ப்பியோடிவிட்டார்.

இதையடுத்து இ ரத்த வெ ள்ளத்தில் கீழே ச ரிந்த கல்யாண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கணவருடன் சேர்ந்து புதுவாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்க வேண்டிய புதுப்பெண் புஷ்பலதா, மருத்துவமனையில் படுத்திருக்கும் கல்யாண் அருகில் சோ கத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி நெஞ்சை உ ருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இதனிடையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கு ற்றவாளி ரவியை தேடி வருகின்றனர்.