15 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற அத்தைகள் : அதிர்ச்சிக் காரணம்!

703

இந்தியாவில் 15 வயது சிறுமியை அவரின் இரண்டு அத்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் முகமது ஹுசைன் உமர். இவரின் மகள் மைனாஸ் முகமது குரேஷி (15). குரேஷியின் தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் சிறுவயதிலிருந்து பாட்டி வீட்டில் அவர் வசித்து வந்தார். பாட்டி வீட்டில் அவருடன் இரண்டு மாமாவான யூசுப் மற்றும் சலீமும் அத்தைகளான சபீரா சயித் (45) மற்றும் ஸ்வலிஹா சயித் (35) ஆகியோரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சபீராவும் சயித்தும் குரேஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மருத்துவரிடம் இருவரும் கூறினார்கள். குரேஷியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

ஆனால் குரேஷியின் கழுத்தில் அடிப்பட்ட தழும்பு இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் வந்து விசாரித்து போது முதலில் சரியாக பேச மறுத்த சபீராவும், சயித்தும் பின்னர் குரேஷியை தாங்கள் தான் துப்பட்டா துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டனர்.

மேலும், குரேஷி பிராத்தனை செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இதோடு சபீராவின் 17 வயது மகளும் குரேஷியை துன்புறுத்தியாக தெரியவந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.