மனைவியின் கண் முன்னே கணவனை கா வு வாங்கிய சுறா : செருப்பு மட்டுமே மிஞ்சிய சோ கம்!!

533

அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்தச் சென்ற கணவனை, மனைவியின் கண் முன்னேயே சுறா ஒன்று க வ்வி இ ழுத்துச் சென்ற சோ கம் நடைபெற்றுள்ளது.

நேற்று அவுஸ்திரேலியாவின் கல் தீவு பகுதிக்கு Gary Johnson என்பவர் தன் மனைவி Karen Milliganஉடன் படகில் சென்றுள்ளார்.

ஆழ் கடல் நீச்சலில் மிகுந்த விருப்பமும், கடல் மீது தீரா காதலும் கொண்ட Johnson கடலில் குதித்து நீந்த, அவரது மனைவி படகில் இருந்தவண்ணம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

மதியம் சுமார் 1.30 மணியளவில் சுறா ஒன்று அவரைக் க வ்வி இ ழுத்துச் சென்றுள்ளது. கண் முன்னே கணவனை சுறா இழுத்துச் செல்வதைக் கண்ட Karen, ப யந்து அ லறி, ரேடியோவில் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளார்.

விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினருக்கு Johnson நீந்துவதற்கு பயன்படுத்தும் செருப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கணவனின் கோ ரச் சா வை கண்டு தி கிலில் உறைந்து போயிருந்த Karenஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவருகிறார்கள். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தொடர்ந்து Johnsonஇன் உடலை தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே, 2017ஆம் ஆண்டு Laeticia Brouwer என்ற 17 வயது பெண் Wylie Bay பகுதியில் சுறாவால் கொ ல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒருவர் சுறாவால் கொ ல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.