நள்ளிரவில் சுவர் ஏறிக்குதித்து இளைஞன் செய்த செயல் : சிசிடிவியில் கண்ட காட்சி!!

667

கோயம்புத்தூரில் அடுத்தவர் வீட்டு படுக்கை அறையை இளைஞர் ஒருவர் எட்டிப்பார்க்கும் சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் அருகே மருதம் நகர், பாரதி காலனி, பூம்புகார் நகர் மற்றும் இன்னும் பல பகுதிகளில் வீட்டின் உரிமையாளர்கள் சிசிடிவி கமெராக்களை பொருத்தியுள்ளனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வீட்டின் உரிமையாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, இரவு 10.30 மணியளவில் இளைஞர் ஒருவர் படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதில், மோட்டார் சைக்கிளில் வரும் 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர், சுவர் ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே துணியை விலக்கி பார்க்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் அக்கம்பக்கத்தினரை விசாரித்த போது இதே வேலையை அவர்களது வீட்டிலும் செய்வது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் துடியலூர் பொலிசாருக்கு புகாரளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் சிசிடிவியில் பதிவான மோட்டார் சைக்கிள் எண்ணை கொண்டு இளைஞனை தேடி வருகின்றனர்.

மனநிலை சரியில்லாத காரணத்தினால் குறித்த இளைஞன்a இவ்வாறான செயல்களில் ஈடுபடலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.