பொங்கலுக்கு ஆசையாக வாங்கிய பைக் : இளைஞர் பரிதாப மரணம்!!

1139

பொங்கலுக்கு ஆசையாக புது பைக்கை வாங்கி ஓட்டிப் பார்த்த போது நடந்த விபத்தில் இளைஞர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தின் வெள்ளைத்திடல் பகுதியை சேர்ந்தவர் இளவரசன், பைக் ஓட்டுவதில் வல்லவரான இளவரசன் சாதாரணமாக சாலையில் செல்லும் போது அதிவேகமாக செல்வதுண்டு.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வண்ணம் ரூ.2 லட்சம் மதிப்பில் பைக் வாங்கியுள்ளார்.

இதனை எடுத்துக்கொண்டு உதயகுமார் என்பவருடன் சேர்ந்து பைக்கில் பயணித்துள்ளார், அப்போது சந்தைதோப்பு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், சிகிச்சை பலனின்றி இளவரசன் உயிரிழக்க உதயகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொலிஸ் விசாரணையில் இளவரசன் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.