திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் : பெற்றோருடன் இளைஞரின் அதிரவைத்த முடிவு : கதறும் குடும்பம்!!

884

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியிருந்த நிலையில், இளைஞர் ஒருவர் பெற்றோருடன் த ற்கொ லை செய்து கொண்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அருகே கடையம் பகுதியில் குடியிருக்கும் சந்தானம் லட்சுமி தம்பதியின் மகன் ஸ்ரீதர் என்பவரே பெற்றோருடன் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

மிட்டாய் வியாபாரியான சந்தானம் சமீபத்தில் புது வீடு ஒன்றை கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். ஏற்கெனவே நிறைய கடன் இருந்துள்ளதால், சந்தானம் புது வீடு கட்டி குடியேறியதும், கடனை திருப்பிக் கேட்டு நெ ருக்கடி அளித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி கடன் தந்தவர்கள் குடியிருப்புக்கு வந்து த கராறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதர் மற்றும் பெற்றோர் ம னமுடைந்து காணப்பட்டுள்ளனர். அன்றிரவே வி ஷம் அருந்தியுள்ளனர்.

சம்பவத்தின் போது ஸ்ரீதரின் தங்கை ஜோதி தூ க்கத்தில் இருந்ததால், அவர் விடிந்த பிறகே இச்சம்பவம் தொடர்பில் அறிந்துள்ளார். இந்த நிலையில் ஜோதியின் அ லறல் ச த்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், மூவரையும் மீட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் ஒருவர் பின் ஒருவராக மூவரும் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளனர். ஸ்ரீதரும் தமது தொழில் நிமித்தம் பல லட்சம் கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கும் நெ ருக்கடி இருந்துள்ளதாக வி சாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், த ற்கொ லைக்கு கடன் நெ ருக்கடி மட்டுந்தான் காரணமா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.