திருமணம் ஆன 10 மாதத்தில் உயிர் தியாகம் செய்த கணவர் : அவர் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி!!

481

புல்வாமா வ ன்முறை சம்பவத்தில் வீரம ரணம் அடைந்த கணவரின் வழியை பின்பற்றி மனைவியும் இரா ணுவத்தில் இணைய உள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

புல்வாமாவில் உ யிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தவுன்தியாலின் மனைவி 28 வயதாகும், நிதிகா தவுன்தியால், இந்திய இரா ணுவத்தில் எழுத்து தேர்வு தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். அந்த முடிவுகள் வெளியானதும் அவர் ஒரு இரா ணுவ வீரராக மாறுவார்.

இது பற்றி நிகிதா கூறுகையில், எனது கணவர் விபூ பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். காதல் வாழ்க்கை, தைரியம், புத்திசாலித்தனம், பிறருக்கு உதவுதல் என பல வகைகளில் அவர் சிறப்பாகத் திகழ்தார்.

அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இந்த முடிவை எடுத்தேன். எங்களது காதல் எப்போதும் மாறாது, அவரது தைரியம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் வாழும் வரை நிலைத்திருக்க செய்வேன்” என்று கூறினார்.

மேலும், “குடும்ப தலைவரை, வாழ்க்கை துணையை இழப்பது அவ்வளவு ஒன்றும் எளிதான விஷயம் அல்ல, அவரது நினைவு இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட எங்களால் கடந்துவிட முடியாது, நாங்கள் அவரை பற்றியே பேசிக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அவர் எங்களுடன் இருப்பது போன்றே உணர்கிறோம்” என்று கூறுகிறார் நிகிதா.

விபூதி ஷங்கர் தவுன்தியால் – நிகிதா திருமணம் நடைபெற்று வெறும் 10 மாதங்கள் மட்டும் ஆனநிலையில் புல்வாமா சம்பவத்தில் விபூதி கொ ல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.