ஒரு நாள் இரவுக்கு 1000 : டிக் டாக் சில்க் இலக்கியா பெயரில் கல்லா கட்டும் வசூல்!!

1702

டிக் டாக் இலக்கியா

இரவு முழுவதும் அரைகுறை ஆடையுடன் நடன விருந்து அளிப்பதாக டிக்டாக் நடிகையொருவர் பலரை ஏமாற்றிய சம்பவமானது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் செயலியானது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த செயலியின் மூலம் பல பெண்கள் தங்களுடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இல்லத்தரசிகளும் தங்களுடைய குடும்ப நிலையை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத்தை நிர்வாகிக்கும் பொறுப்புடைய ஆண்களும் இதுபோன்ற வீடியோக்களில் வரும் கனவுக்bகன்னிகள் மீது ஆசை ஏற்பட்டு வாழ்விலிருந்து பிறழ்கின்றனர்.

டிக்டாக்கில் கடந்த சில மாதங்களாக இலக்கியா என்ற இளம்பெண் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

தொடக்கத்தில் இவருடைய வீடியோக்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவித லைக்குகளும் வரவில்லை. இதனால் தான் நடிக்கும் விதத்தை இலக்கியா மாற்றிக்கொண்டார்.

அரைகுறை ஆடைகளுடன் டிக்டாக் வீடியோக்களில் நடிப்பதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இலக்கியாவின் பெயரில் பல்வேறு விதமான பொய்க்கணக்குகள் உருவாகின. இந்நிலையில் இரவு நேரத்தில் அரைகுறை ஆடைகளுடன் பிரைவேட்டாக நடனமாடுவதற்கு 5,000 ரூபாய் என்று அந்த பொய் கணக்குகளில், ஒரு வங்கி அக்கவுன்ட் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது.

அதனை நம்பிய பல ஆண்கள் பணத்தை செலவழித்து, அன்றிரவு இலக்கியாவின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் இலக்கியாவோ அவர்கள் நினைத்து பார்த்தபடி வரவில்லை.

பணத்தை செலவழித்து ஆண்மகன்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர். பின்னர் இதுகுறித்து இலக்கியாவிடம் கேட்டறிந்த போது, அவை பொய்க்கணக்குகள் என்றும், தனக்கும் அவற்றிற்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் அளித்தால் மானம் போய்விடும் என்பதற்காக பாதிக்கப்பட்ட ஆண்மகன்கள் எதையும் செய்யாமல் பரிதவிக்கின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.