கொரோனாவுக்கு பலியான தாயின் இறுதிச்சடங்கில் சுருண்டு விழுந்து இறந்த மகள்!!

644

கொரோனாவுக்கு..

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மகள், மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.

வார்விக்ஷயர் பகுதியில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாதிரியார் உட்பட அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவரது உதவிக்குன் விரைந்துள்ளனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

மறதி நோயால் அவதிப்பட்டு வந்துள்ள 63 வயது ஜூலி மர்பி கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சையில் இருந்து வங்துள்ளார்.

இந்த நிலையில் அவரது நிலை மோசமடையவே, சிகிச்சை பலனின்றி ஜூலி மரணமடைந்துள்ளார். கடந்த செவ்வாய் அன்று ஜூலியின் இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தமது தாயாரின் மறைவை தாங்க முடியாத 32 வயது லாரா ரிச்சார்ட்ஸ் சம்பவயிடத்திலேயே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.