திருமணம் நடக்கவிருந்த நிலையில் தோழியுடன் சேர்ந்து ஒரே புடவையில் தூ க்கில் தொ ங்கிய மணப்பெண்!!

371

மணப்பெண்..

தமிழகத்தில் திருமணம் தங்களை பிரித்து விடுமோ என்ற கவலையில் மணப்பெண் தோழியுடன் தாற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கொக்கிகளை இளையம்பாளையம் பகுதியை நந்தகுமார். இவரது மனைவி ஜோதி(23) இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

ஜோதியின் பெற்றோர் கடந்த 6 மாதங்களாக கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோதி கணவரை பிரிந்து பெரியமணலியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள தறிப்பட்டறைக்கு அவர் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த தரிப்பட்டறையில் கோட்டபாளயத்தை சேர்ந்த பிரியா(20) என்பவரும் வேலை செய்து வந்தனர் இன்னும் திருமணம் ஆகவில்லை ஜோதிக்கும் பிரியாவுக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் இணை பிரியாத தோழிகளாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரும் அளவுக்கு நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 27-ந் திகதி பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதற்கிடையில் திருமணம் நடந்தால் நெருங்கிய தோழியான ஜோதியை பிரிய நேரிடுமே என்று மணப்பெண் பிரியா மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை பிரியா, தாயிடம் கூறிவிட்டு சைக்கிளில் ஜோதி வீட்டுக்கு வந்தார்.

அங்கு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் ஒரே சே லையில் வீட்டில் தூக்குப்போ ட்டு தற்கொ லை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.