கொரோனாவிலிருந்து மீண்ட என்னுடைய 18 குழந்தைகள்.!சந்தோஷத்தில் லாரன்ஸ்

498

லாரன்ஸ்….

சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் இருக்கும் சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், அந்த தகவலை லாரன்ஸ் அவர்களும் உறுதி செய்தார், அவரது அறக்கட்டளையில் உள்ள 18 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போது, தான் செய்யும் பணிகள் என் குழந்தைகளை காக்கும் என்றும் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ராகவா லாரன்ஸ் தனது ஆசிரமத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் சமீபத்திய சோதனைகள் எதிர்மறையாக (negative) வந்த பின்னர், மீண்டும் ஆசிரமத்துக்கு திரும்பியதாக மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கூட்டுறவு கமிஷனர் ஜி.பிரகாஷ்க்கும் நன்றி தெரிவித்த அவர், அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவைக்காகவும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.