நடிகை ரஞ்சிதாவுக்கு “ஆசிரமத்தில்” நடக்கும் “கொடுமைகள் : கண்ணீருடன் கதறும் ரஞ்சிதா!

1576

நடிகை ரஞ்சிதா பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்தியானந்தாவுடன் ஆபாசமாக இருந்ததாக வெளியான வீடியோ காட்சிகளால் சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரஞ்சிதா.

அது குறித்தானக் காட்சிகள் சில தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு பரபரப்பைக் கிளப்பின. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டக் காட்சிகள் போலியானவை என நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா தரப்பு விளக்கமளித்தன. இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினமான நேற்று அவரிடம் தீட்சைப் பெற்று சன்னியாகி ஆகியுள்ளார் ரஞ்சிதா.

கடந்த 1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் இயக்குனர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பல முண்ணனி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார்.

திரைத் துறையில் இருந்து அவரது கவனம் சிறிது சிறிதாக ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு சென்று சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். ரஞ்சிதா சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர், தொலைபேசி வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து நேரிலும் தன் மீது சுமத்தப் பட்ட பழி குறித்து விளக்கமளித்தார்.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நித்தியானந்தா-ரஞ்சிதா குறித்தான சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மறுப்பும், மன்னிப்பும் கேட்டு ஒளிபரப்பியது.

இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார். அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி ‘மா ஆனந்தமயி’ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர். நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.