‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ : சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்!!

807

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று
நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சிக்கர் தவான் 79 (49), வில்லியம்சன் 51 (39) ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 180 என்ற இலக்கை 2
விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19 ஓவர்களிலேயே எடுத்து, சென்னை அணி எளிமையாக வென்றது. சென்னை அணியில் அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 100 (62) ரன்கள் விளாசினார். வாட்சன் 57 (35), கேப்டன் தோனி 20 (14) ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றன.

குறிப்பாக, அம்பதி ராயுடுவை வாட்சன் அரவணைத்து பாராட்டியது. ‘கலக்கிட்ட அம்பா’ என சின்னத் தல ரெய்னா கட்டித் தழுவியது. தோனிக்கு, அவரடு மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது.

சிக்கர் தவான் மற்றும் புவனேஷ் குமாரிடம் ரெய்னா ஏதோ சொல்லி கிண்டல் அடிப்பது. ஆனால் இந்த புகைப்படத்தை சென்னை அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி தவான் மற்றும் புவனேஷ் குமாரிடம் ரெய்னா ‘வடபோச்சா’ என்று கூறுவது போல்
மீம்ஸ் போட்டு வருகின்றனர்.