மகனுக்காக வாடகைத் தாயாக மாறிய பெண்: நெகிழ்ச்சி சம்பவம்!!

861

மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை இல்லாததால், அவரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக அவரது தாய் முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கெய்லா ஜோன்ஸ். 29 வயதாகும் இவருக்கும், கணவருக்கும் குழந்தை இல்லை. ஏனெனில் கெய்லா 17 வயது இருக்கும்போது கடுமையான நோயால் பாதிப்புக்குள்ளானதால், அவருடைய கர்ப்பை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதனால் மருத்துவர்கள் அவருடைய கர்ப்பபையின் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கியுள்ளனர். இனி அவரால் குழந்தையை வயிற்றில் சுமக்க முடியாது என்பதையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், கெய்லாவின் கருமுட்டைப்பை நீக்கப்படாத காரணத்தினால், அவரின் கருமுட்டையை எடுத்து, குழந்தையைப் பெற அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.

இதன் காரணமாக ஒரு வாடகைத்தாயை அமர்த்திக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஜோன்ஸ் தம்பதி முடிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு நம்பிக்கையான பெண் கிடைக்காத காரணத்தினால் மிகவும் மனம் வருந்தியுள்ளனர்.

மகனும் மருமகளும் குழந்தைக்காகப் படும் அவஸ்தைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்த மகனின் தாயார் பேட்டி நானே வாடகை தாயாக இருப்பதாக கூறியுள்ளார்.

குழந்தையை சுமக்க முதலில் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்றாலும் இறுதியில் ஏற்றுக்கொண்டனர். தற்பொது பேட்டி தனது பேத்தியை வயிற்றில் சுமந்து வருவதாக கூறப்படுகிறது.