திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை : யாஷிகா!!

1092

 

திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தை பார்த்தவர்களால் யாஷிகா பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.

படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் தில்லான பெண். யாஷிகா அடல்ட் காமெடி படத்தில் நடித்திருக்கிறார் என்றால் இவர் எந்த மாதிரியான பெண்ணாக இருப்பார் என்று எழுந்துள்ள விமர்சனங்களை யாஷிகா கண்டுகொள்ளவில்லை.

படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை 3 வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார் யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்று யாஷிகா தெரிவித்துள்ளார். ஸ்கூட்டி அல்ல மாறாக புல்லட் ஓட்டும் யாஷிகா பேட்டிகளில் ரொம்பவே ஓபனாக பதில் அளித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன.