பிரித்தானியாவில் மர்மான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிப் பெண்!!

715

 

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மிகவும் மோசமான காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Leeds பகுதியைச் சேர்ந்த தம்பதி Mitesh(36)- Jessica Patel(34). இருவரும் Roman சாலையில் உள்ள மருந்துகடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 08.20 மணியளவில் வீட்டில் Jessica Patel மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பரபரப்பு மிகுந்த இந்த பகுதியில் சம்பவ தினத்தின் போது யாரேனும் சந்தேகப்படும் வந்திருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அங்கிருக்கும் மக்களிடம் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிரேத பரிசோதனையில் அவருக்கு மிகவும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது கொலையாக இருக்கலாம் எனவும், இது தொடர்பாக 37 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.