எந்த ராசிக்காரர்கள் எந்த கோயிலை வழிபடவேண்டும்? எப்போது வழிபட வேண்டும்?

1224

பன்னிரெண்டு ராசியினரும் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்ரக்கோயில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்:சஷ்டி திதி அல்லது புனர்பூச நட்சத்திரத்தன்று திருச்சந்தூர் முருகனை தரிசியுங்கள். மேலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள். தொழில் வருமானம் பெருகும்.

ரிஷபம்:திருவாதிரை நட்சத்திரத்தன்று திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதரை வழிபடுங்கள். திருமணத்திற்கு பொருள் உதவி செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம்:பூர நட்சத்த்திரத்தன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். முதியோருக்கு உதவுங்கள் உங்கல் விருப்பம் நிறைவேறும்.

கடகம்:திங்கட்கிழமை அல்லது பூர நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபடுங்கள், மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமாங்கல்யம் வாங்க உதவி செய்யுங்கள்.

சிம்மம்:சுவாதி நட்சத்திரத்தன்று சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரி குருராஜரான ராகவேந்திரரை வணங்குங்கள், தொழு நோயாளிக்கு உதவி செய்தால் மனதில் நிம்மதி கிடைக்கும்.

கன்னி:சதயம் நட்சத்திரத்தன்று திண்டிவனம் அருகிலுள்ள திருவக் கரையில் கோயில் கொண்டிருக்கும் வக்ரகாளி அம்மனை வழிபடுங்கள், ஏழைக்கு பொருளுதவி செய்யுங்கள். தடை நீங்கு உங்கள் முயற்சிகள் நிறைவேறும்.

துலாம்:ரேவதி நட்சத்திரத்தன்று விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோயிலிலுள்ள ஆழ்த்துவிநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள், திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் நல்ல திருப்பம் உருவாகும்.

விருச்சகம்:அசுவினி நட்சத்திரத்தன்று மருதமலையில் பாம்பாட்டி சித்தர், முருகன் சன்னதியில் தீபமேற்றி வழிபடுங்கள், விதவைப் பெண்ணுக்கு உதவுங்கள். வெற்றிகள் கிடைக்கும்.

தனுசு:ஞாயிறு அல்லது உத்திர நட்சத்திரத்தன்று கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்புரியும் சரபேஸ்வரரை வழிபடுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தால் மன குழப்பம் நீங்கி தெளிவு பெருவீர்கள்.

மகரம்:உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராகவப் பெருமாளை தரிசியுங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவினால் வாழ்வு பிரகாசமாகும்.

கும்பம்:திருச்சி சமயபுரத்தில் அருள்பாலிக்கும் மாரியம்மனை, பரணி நட்சத்திரத்தன்று மாவிளகேற்றி வணங்குகள். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு உதவுங்கள். செல்வம் செழிக்கும்.

மீனம்:பௌர்ணமி திதி அல்லது மக நட்சத்திரத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வணங்குங்கள். புற்று நோய் உள்ளவர்களுக்கு உதவுங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.