இன்றைய ராசிபலன் (17-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

339

இன்றைய ராசிபலன்……………….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் பணிச்சுமையை கூட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் மந்தநிலை காணப்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கிரக அமைப்புகள் சாதகமற்று இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. புதிய விஷயங்களில் முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்துடன் இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய அமைப்பாக உள்ளது. நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். உங்களுடைய கிரக அமைப்பு அற்புதமாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பகைவர்கள் தொல்லை தீர கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில்முறை போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். மேலதிகாரிகளுடன் இருந்த மனக் கசப்புகளும் நீங்கும். ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் வீண் செலவுகள் செய்ய நேரலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற டென்ஷன் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காரண காரியம் இன்றி ஏற்படும் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் முன் ஆரவாரம் செய்வது நல்லதல்ல. பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற சண்டை சச்சரவுகள் தவிர்ப்பது உத்தமம். வெளியூர் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கை இருந்தாள் ஆரோக்கியம் சீராகும். பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நலம் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக அமையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டு தேவையான சிக்கனத்தை கடைபிடிப்பது மூலம் பொருளாதாரத்தை எளிதாக சமாளித்து விடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.