இன்றைய ராசிபலன் (18-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

330

இன்றைய ராசிபலன்……………….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் ஒன்று முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் மூன்றாம் நபர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சார்ந்த செலவுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. சீரான உணவு கட்டுப்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரமாக அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியம் தேவைப்படும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் செய்து விடாதீர்கள். ஒரு விஷயத்தை செய்யும் முன்னர் நூறு முறை யோசியுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சாதுரியமான பேச்சால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று இனிதே நடைபெற வாய்ப்புகள் உள்ளன. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. சொத்துக்கள் ரீதியான விஷயங்களில் நம்பியவர்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் ஒன்று நிறைவேற்றுவதில் இழுபறி நிலை காணப்படும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் சுமைகள் குறையும் யோகம் உண்டாகும். வருமானம் பெருகுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோக ரீதியான விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்கும். உடன் பணிபுரியும் நபர்களுடன் அனுசரித்துச் செல்வதே ஏற்றம் தரும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கை தேவைப்படும் நாளாக அமைகிறது. எடுக்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் வழி பெற வாய்ப்பு உள்ளது. பொருளாதார பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். பெண்கள் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி நடந்து கொள்ள முடியாது. சாதுரியமான செயல்பாட்டால் வெற்றிகளை அடையலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பார்த்த இடத்திலிருந்து தொகை கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சினைகள் சமாளிக்கக் கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை இருந்து வந்த துன்பங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றமான சூழ்நிலை இருக்கும்.