பாலாஜி, ஷிவானி..
கடந்த சில நாட்களாக நடைபெற்ற டெலிகாலர் டாஸ்க் நேற்று முடிவுக்கு வந்தது. கேப்டனாக இருந்தும் ஆஜீத்திடம் சொல்லிவிட்டு ரியோ போன் செய்ததை சக போட்டியாளர்கள் அலசி, ஆராய்ந்ததன் விளைவாக ரியோ ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.
யாருக்கும் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு கேப்டனாக அவரே ரூல்ஸ் மீறியது ரியோவுக்கு எதிராக திரும்பி விட்டது. இதுதொடர்பான விவாதம் சென்று கொண்டிருந்த போது, நான் பாலாவுக்கு தான் போன் செய்ய போகிறேன் என அர்ச்சனா, ஷிவானியிடம் சொன்னதாக தெரிவித்தார்.
இதற்கு பாலாஜி நீங்கள் சொன்னதை ஷிவானி என்னிடம் சொல்லவில்லை என நேர்மையின் வழக்கம்போல ஷிவானியை காப்பற்றினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அர்ச்சனா, வேகமாக சென்று ஷிவானியை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
இந்த நிலையில் பாலாஜி, ஷிவானி இருவருமே பொய் சொன்னதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் அர்ச்சனா தான் உங்களுக்கு கால் பண்ண போறாங்க என ஷிவானி தெரிவிக்க பதிலுக்கு பாலாஜி உனக்கு எப்படி தெரியும்? என கேட்கிறார்.
#BiggBossTamil4#Shivani & #Bala… The LIARS
This is the drawback of #Archana… Immiedietly she believe anyone and hug and say thanks, not thinking whether they are truthful or Liars… pic.twitter.com/oV0qvy2qNX
— michael arun (@arunjeba) November 27, 2020
அதற்கு ஷிவானி அவங்க பேசுனதை நான் ஒட்டு கேட்டேன் என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.