இதுதான் தெய்வீகக் குழந்தையா? குட்டிதேவதையின் செயலைப் பாருங்க… உருகிடுவீங்க..!

279

தெய்வீகக் குழந்தை……….

சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை குழந்தைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். இங்கே ஒரு குழந்தை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. வீட்டு பூஜையறையில் இருந்து தன் தாய்க்கு உதவியாக அந்த பிஞ்சுக்குழந்தை தலையில் துணியும் கட்டிக்கொண்டு வாசலில் விபூதி, குங்குமத்தை தேய்ப்பதை வேற லெவல் என்றே சொல்லலாம். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். உங்களையும் அறியாமல் மெய்சிலிர்த்துப் போவீர்கள்.