கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

891

பொதுவாக இந்தியாவில் பெண் கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் கூறமாட்டார்கள். இது சட்டபடி குற்றமும் ஆகும். ஆனால் உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது முன்னோர்கள் பிறக்க போவது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர்கள் சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தனர்.

நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பவராக இருந்தால், உங்களது சருமம் வறட்சியாக இருக்கும். உங்களது சருமம் மிகவும் பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தை என்பதை கணிக்கலாம்.

உங்களது தலைமுடி மிகவும் பளப்பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை கண்டு பிடிக்கலாம். உங்களது தலைமுடி வறட்சியாகவும், அதிகமாக உதிர்ந்தாலும் உங்களுக்கு பிறக்க போது பெண் குழந்தையாக இருக்கும்.

உங்களது உடலில் உள்ள முடிகள் மிகவும் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்தால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை எனவும், உடலில் உள்ள முடிகள் குறைந்தால், பெண் குழந்தை எனவும் முன்னோர்கள் கணித்தார்கள்.

மார்பகங்கள் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் இருக்கும். இது இயல்பானது தான். நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது, வலது மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களது கருவில் இருப்பது ஆண் குழந்தையாகவும், இடதுபுற மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்கும்.நமது முன்னோர்கள்

கர்ப்பிணி பெண்ணின் முகத்தை வைத்தே பிறக்க போவது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என்பதை கண்டறிந்தனர். நீங்கள் மிகவும் அழகாகவும், பிரகாசமாகவும் ஒரு தேவதை போல முன்பு எப்போதும் இல்லாதது போன்ற முகப்பொலிவுடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையாகவும், சோகமான கண்கள், பொலிவிழந்த முகத்துடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு தாயின் தோற்றத்தை வைத்து குழந்தையின் பாலினத்தை முன்னோர்கள் கண்டறிந்தனர் என்ற கதைகள் நிலவி வருகின்றன. இவை சில சமயங்களில் உண்மையாகவும் நிகழ்கிறது.