மெர்க்கலை இளவரசர் ஹரி திருமணம் செய்துகொண்டது எதற்காக? சுவாரசிய தகவல்!!

596

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் மே 19 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.நடிகையான மெர்க்கலை இளவரசர் ஹரி காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2016 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

அரச குடும்பத்தின் ஆடை வடிவமைப்பாளர் Misha Nonoo, மெர்க்கலின் நீண்ட கால தோழியாவார். இவர் மூலமே இளவரசர் ஹரியுடன் மெர்க்கலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஹரி வெளியில் சென்றபோது அந்த நண்பர்கள் கூட்டத்தில் மெர்க்கலும் ஒருவர். அந்த சந்திப்பின்போது இருவரும் ஒருவரையொருவர் அறிமுகமாகிக்கொண்டனர். இந்த சந்திப்பினை தொடர்ந்து இருவர் மட்டும் மீண்டும் தனியாக சந்தித்துக்கொண்டனர்,

அப்போது, மெர்க்கலின் சமூக தொண்டு உணர்வு ஹரிக்கு பிடித்துப்போனதால் இருவரும் அதிமாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.

மெர்க்கலின் இந்த பண்புகள் பிடித்துப்போனதாலேயே மெர்க்கலை, ஹரி திருமணம் செய்துகொண்டுள்ளார்,இவர் முதல் முறையாக சென்ற டேட்டிங் ஆப்பிரிக்கா. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி இவர்களது காதல் வாழ்க்கை வெளிஉலகத்திற்கு தெரியவந்தது. அப்போதுதான் இளவரசர் ஹரி, மெர்க்கல் என்ற நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாக ஆரம்பித்தன.

தொடர்ந்து மெர்க்கலின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதிகமாக விமர்சனத்திற்கு ஆளானது, மேலும் அவர் கறுப்பினத்தவர் என இனவேறுபாடுகள் அவர் மீது காட்டப்பட்டு, அவரது குடும்பத்தார் குறித்தும் விமர்சிக்கப்பட்டது.

இது ஹரிக்கு அதிக மனவேதனையை ஏற்படுத்தியதையடுத்து, இனிமேல் மெர்க்கல் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து பொது இடங்களில் விமர்சனம் செய்ய வேண்டாம் என பர்க்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இரண்டு பேரின் காதல் உறுதிசெய்யப்பட்டது.

அதன்பின்னர், லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின. இளவரசர் ஹரி தனது காதலிக்கு முதல் முதலாக வாங்கிகொடுத்த பரிசு தங்கத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நெக்லஸ். அதில் H மற்றும் M ஆகிய இரண்டு எழுத்துக்க அடங்கியிருக்கும்.

இவர் காதலிக்கும்போது, மெர்க்கல் ஒருமுறை கனடாவில் இருந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக இளவரசர் ஹரி பயணித்து இந்த காதல் பரிசினை அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மெர்க்கல், நாங்கள் காதலில் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையில் முன்னோக்கி வந்துவிட்டோம், இது எங்களுக்கான நேரம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அரச குடும்பத்தாரை மெர்க்கல் சந்திக்க ஹரி ஏற்பாடு செய்தார். இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்தார்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.