உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை!!

471

கரோலின் ஜூரி..

கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 2020ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை கரோலின் ஜூரி மீள கையளித்துள்ளார். இதனை உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதே வருடத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அயர்லாந்தை சேர்ந்த கேட் ஷினெய்டருக்கு (Kate Schneider) 2020ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது. கரோலின் ஜூரியின் தனது பட்டத்தை துறப்பது குறித்த தீர்மானத்தை அவர் சுயமாக எடுத்துள்ளார்.

அவரது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோலின் ஜூரியின் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும் திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2020ம் ஆண்டுக்கான இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும் போட்டியில் வெற்றிப் பெற்று முடிசூடிய போது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக் கூறிய கரோலின் ஜூரி, அதனை போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்மையில் கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.