77 வயது முதியவரை மணந்து மகிழ்ச்சியாக உள்ளேன்: 16 வயது சிறுமி அதிரடி!!

595

ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஓமனை சேர்ந்த 77 வயது முதியவரை மணந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக உள்ளதாக அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளார்.

ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது (77) என்ற முதியவர் கடந்தாண்டு ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தனது மகளை தனது கணவர், சகோதரி சேர்ந்து ஐந்து லட்ச ரூபாய்க்காக ஷேக்கிடம் விற்றுவிட்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஓமன் காவல்துறையினர் உதவியுடன் ஹைதராபாத் பொலிசார் விசாரணை நடத்தியதில் தான் ஷேக்குடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பமில்லை எனவும் சிறுமி கூறினார்.

இந்நிலையில் மஸ்கட் தூதரகம் மூலம் சிறுமியை மீண்டும் மீட்க தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி தூதரக அதிகாரிகள், ஓமன் அதிகாரிகளிடம் சிறுமியை விசாரிக்க கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கணவர் ஷேக்குடன் தான் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், இந்தியாவுக்கு திரும்ப தனக்கு விருப்பமில்லை எனவும் சிறுமி கடிதம் எழுதி கொடுத்ததாக ஓமன் அதிகாரிகள் தூதரக அதிகாரிகளிடம் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது பலருக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைதளங்களில் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதாவது ஒரு பேப்பரில் எழுதியதை வைத்து எப்படி அது சிறுமியின் அறிக்கை என கூறுகிறார்கள்.

தனது தந்தையை விட வயது அதிகமானவருடன் சிறுமி மகிழ்ச்சியாக எப்படி வாழமுடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையில் குழந்தை உரிமை ஆர்வலர் மற்றும் குழந்தை உரிமைகள் மாநில ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் அச்சுத ராவ் கூறுகையில், சட்டப்படி பார்த்தால் சிறுமியின் அறிக்கை என்பது செல்லாது.

இந்திய அதிகாரிகள் மைனர் சட்டம் குறித்து சரியாக தெரிந்து கொள்ள வேண்டும், சிறுமியை ஓமனிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.