பிரித்தானியாவில் சொந்த மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயார்: பொலிசில் சிக்கியது எப்படி?

660

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் 3 வயது சிறுமி மர்மமாக இறந்த சம்பவத்தில் அவரது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Trealaw கிராமத்தில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 வயது Carly Ann Harris என்பவரின் குடும்ப நண்பருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவரை, சிறுமியின் சகோதரர் வீட்டின் தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே வெள்ளை போர்வைக்குள் சிறுமியின் சடலத்தை கண்டு உறைந்து போனதாகவும், உடனையே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் சிறுமியின் தாயாரை கைது செய்துள்ளதுடன் அந்த வீட்டுக்கும் சீல் வைத்துள்ளனர்.சிறுமியின் தாயாருக்கு மத நம்பிக்கை அதிகம் எனவும், கடவுளிடம் பேசுகிறேன் என பலமுறை தெரிவித்துள்ளதாகவும், அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் இறப்புக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அவர் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்திருக்க கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Carly-கு மேலும் இரு பிள்ளைகள் உள்ளன. இறந்த Amelia மீது அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார் என கூறும் அவரது தோழி ஒருவர்,ஆனால் தற்போது எஞ்சிய இரு பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழும் என்றே அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர்.

காரணம், Carly மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது என்றார் அவர்.

சொந்த பிள்ளைகளிடம் ஒரு தாயார் இவ்வாறு நடந்து கொள்வாரா என்று தெரியாது எனக் கூறும் அவர் இது மிகவும் கொடூரமான கனவு என தெரிவித்துள்ளார்.