கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் மருத்துவரைக் காப்பாற்ற கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

438

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் பாதித்த மருத்துவருக்காக, ஒரு கிராம மக்களே சேர்ந்து செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவர் ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது 34 வயதில் பாக்யலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

மருத்துவரான இவரும், குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அங்கிருக்கும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை புரிந்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் 24-ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாக்கியலட்சுமி கொரோனாவில் இருந்து விடுபட்டார். ஆனால், பாஸ்கர்ராவ் தீவிர நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். முதலில் அவர், குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மேல் சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் வரை செலவாகலாம் எனவும் கூறியுள்ளனர்,

இதை கேட்டு அவரது மனைவி பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்று வேதனையில் இருந்துள்ளார். ஆனாலும் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும், சிறிதளவு பணத்தை திரட்டி, அங்கிருந்து ஐதராபாத் கச்சிபல்லி மருத்துவமனையில் கணவரை சேர்த்தார்.

மேலும் தனக்கு தெரிந்த சிலர் மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் பணத்தை திரட்ட முடிவு செய்தார். தங்களது கிராமத்துக்கு இரவும், பகலும் அயராது மருத்துவ சேவை புரிந்த மருத்துவர் பாஸ்கர் ராவ் உ.யிருக்கு போ.ராடி கொண்டிருக்கிறார் எனும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு எட்டியது.

அ.திர்ச்சியுற்ற அவர்கள் அனைவரும் ஒன்று கூடி மருத்துவருக்கு உதவ முடிவு செய்தனர். அதன்படி, பலர் தங்களால் முடிந்த அளவு பணத்தை சேர்த்தனர். பலர் சேமிப்பு பணத்தை கூட மருத்துவரின் உ.யிர் காக்க கொடுக்க முன் வந்தனர்.

அதன்படி 20 லட்சம் ரூபாய் வரை சேர்ந்தது. அவற்றை பாக்கியலட்சுமியிடம் கொடுத்து, இந்த பணத்தை வைத்துக்கொண்டு மருத்துவ செலவை கவனியுங்கள் என கூறினர்.

மருத்துவர் பாஸ்கர்ராவ் பாதிக்கப்பட்டது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்தது. உடனே அவர், பாஸ்கர் ராவின் சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.