தாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

650

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்.

பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர்

தாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்.உடல் எடை குறையும்,இளமையை பேணி காக்கலாம்,விரைவில் உடல்நலம் குணமடையும்,தைராய்டு சுரப்பிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது,கேன்சர் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது
இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

செரிமான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது,இருதயத்துக்கு தேவையான சக்திகளை வழங்க உதவுகிறது,மூளை செயல்பாடுகளை சுறுசுறுப்பாக்குகிறது,வாதம் வலி பிரச்னைகளில் இருந்து விடுதலையளிக்கிறது.

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.