டியூசன் சென்று வீடு திரும்பாத மகனை தேடிய தந்தைக்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

1319

வேலூரில் டியூசன் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற தந்தை, தனது மகன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கார்த்தி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது வீட்டிற்கு அருகாமையில் டியூசன் சென்று படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மாலை டியூசன் புறப்பட்டுச் சென்ற கார்த்தி, இரவு வரையிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த நரசிம்மன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகனை தேடியுள்ளார்.

இரவு முழுவதும் தேடியும் மகன் கிடைக்கவில்லை என்பதால், மகனின் வருகையை எதிர்நோக்கி நரசிம்மன் காத்துக் கொண்டிருந்த நிலையில் கார்த்தி ஏரியில் மிதப்பதாக சிலர் நரசிம்மனிடம் தெரிவித்துள்ளனர். உடனே ஏரியில் சென்று பார்த்த நரசிம்மன், தனது மகன் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கூறிய காவல்துறையினர், உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் தண்ணீர் எடுக்கும் வாளியைக் கொண்டு கார்த்தி விளையாடியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் நரசிம்மன் கூறும்போது, தனது மகனை யாரோ? அடித்துக் கொன்றுவிட்டதாக கூறிவருவதால் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.