முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை : நடிகரின் மோசமான செயல்!!

1268

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று பிக் பாஸ் 2வது சீசன் தொடங்கியுள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளா்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டன.

இதில், நடிகர் தாடி பாலாஜியும் அவரின் மனைவியும் கலந்து கொண்டுள்ளனர். தாடி பாலாஜி கடந்த சில வருடமாக நடித்து பிரபல்யமானதை விட மனைவியுடன் சண்டை போட்டதால் வந்த சர்ச்சை மூலம் பிரபலமாகியிருந்தார்.

இந்த நிலையில், இருவரும் நிகழ்ச்சியில் சில வருடங்களின் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதன் போது, தாடி பாலாஜியின் மனைவி ஹாய் என்று கூறியுள்ளார்.

எனினும், மனைவியை கண்டுகொள்ளாமல் பாலாஜி சென்று விட்டார். ஏன் இவ்வாறு புறக்கணித்தார் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்னர்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே இருவருக்கும் இடையில் மேதல் ஆரம்பித்து விட்ட நிலையில், இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது போல என்று அதிர்ச்சியுடன் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பிரிந்து வந்த கணவன், மனைவி இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவுள்ளதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொருத்திப் பார்க்கலாம் இவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடக்குமா என்று.. அது மட்டும் இல்லை, பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டதால் பாலாஜி மற்றும் ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கும் நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் புதிய நிகழ்ச்சியை வேறு ஒருவர் தொகுத்து வழங்க போகிறாராம்.

“நீங்களும் ஈரோடு மகேஷும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மாதிரி ஒண்ணாவே இருப்பீங்கனு சொல்வாங்க . யார் கண் பட்டுச்சோ தெரியலை அந்த வைஃபும் இப்ப என்கூட இல்லை,” என பாலாஜி கூறியுள்ளார்.