வெளியேறினார் விருந்தாளி ஓவியா! அடுத்தது என்ன?

589

பிக் பாஸ் 2 சீசனின் விருந்தாளியாக வீட்டினுள் நுழைந்த ஓவியா திங்கள்கிழமை (இன்று) இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.கடந்த சீசனின் கதாநாயகியாகவும், ரசிகர்கள் மனம் கவர்ந்த போட்டியாளராகவும் திகழ்ந்தவர் ஓவியா. அவரது இயல்பான குணம் எல்லோரையும் பெரிதும் கவர்ந்தது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அவரது மவுசு குறையாமல் இருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என் வழி தனி வழி என்றவாறு தன் மனம் விரும்பியவாறு நடந்து கொண்டார்.இந்நிலையில், அவரை இந்த சீசனிலும் விருந்தாளியாக உள்ளே அனுப்பினர் பிக் பாஸ் குழுவினர். வழக்கமாக நிகழ்ச்சி தொடங்கி சில நாட்கள் கழித்துதான் இதுபோன்ற டுவிஸ்ட், சர்ப்ரைஸ்களை கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது முதல் நாளே அப்படியொரு சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, போட்டியாளர்களுக்கும் தந்தனர்.

ஓவியாவின் வருகை மகிழ்ச்சியைக் காட்டிலும் பலருக்கு அதிர்ச்சியை தந்தது என்பதே நேற்றை நிகழ்ச்சி மூலம் தெளிவாகத் தெரிந்தது.ஏற்கனவே, அவர் கொஞ்ச நாள் அங்கு இருப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரது இருப்பு மிகவும் குறுகிய நேரமே மாறியுள்ளது.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்த புதிய போட்டியாளர்கள் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர்.அப்போது ஓவியாவிடம் பேச்சு கொடுத்த மஹத், சும்மா விசிட் பண்ணதான் வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு, இல்லை. நூறு நாள் இருக்கத்தான் வந்துள்ளேன் என்றார் ஓவியா.

இதையடுத்து அவரது பேச்சை நம்பாமல் ஓவியாவின் சூட்கேடை திறந்து பார்த்தபோது துணிகள் எதுவும் இல்லாமல் தண்ணீர் பாட்டில் மட்டும் இருந்துள்ளது.பின்னர் தான் ஒரு விருந்தாளி என்பதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து சில மணி நேரம் கழித்து பிக் பாஸ் ஓவியாவை வெளியேறுமாறு அழைக்க, ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

முதல் நாளிலேயே ஓவியாவை வரவழைத்து போட்டியாளர்கள் மத்தியில் டரியல் ஏற்படுத்திய நிலையில், அடுத்து என்ன டுவிஸ்ட் கொடுக்கப்போகிறார்களோ என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.