காதல் திருமணம் முடிந்து மருத்துவ தம்பதி : கணவரின் சுயரூபம் தெரிந்ததால் அரங்கேறிய பயங்கரம்!!

858

இந்தியா…

இந்தியாவில் கணவர் மற்றும் குடும்பத்தாரின் பண வெ.றியால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் துணிச்சலுடன் செய்த செயலால் தவறு செய்தவர்கள் பொலிசில் சி.க்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாலஹாஸ்தியை சேர்ந்தவர் தேஜஸ்வனி. இவருக்கும் விக்ரம் ராவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தேஜஸ்வனி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு சென்றபின்னர் தான் கணவர் மற்றும் குடும்பத்தாரின் சுயரூபம் தேஜஸ்வனிக்கு தெரிந்தது.

அதன்படி ரூ 2 கோடி வரதட்சணை கேட்டு அவர்கள் தேஜஸ்வனியை கொ.டு.மை.ப்.படுத்தி வந்தனர். இதனால் அ.தி.ர்ச்சியிலும், வே.த.னையிலும் இருந்த தேஜஸ்வனி இனியும் அவர்களுடன் இருந்தால் நல்லது இல்லை என நினைத்து லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

பின்னர் கணவர் மற்றும் குடும்பத்தாரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து கணவர் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்க தேஜஸ்வனி முயன்ற போது வரதட்சணை பணம் கொண்டு வந்தால் தான் இங்கு வந்து வாழமுடியும் என கூறி விக்ரம் மற்றும் அவர் பெற்றோர் தேஜஸ்வனியை வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளனர்.

ஆனால் இதை கண்டு கலங்காத பெண் மருத்துவர் துணிச்சலுடன் கணவர் வீட்டு வாசலில் உட்கார்ந்து போ.ரா.ட்டம் நடத்தினார். இது ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில அரசியல் தலைவர்களும் தேஜஸ்வனியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் தேஜஸ்வனியை சமாதானம் செய்ததோடு அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.