நான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை! தகாத உறவால் நேர்ந்த கதி..?

1034

நான்கு வயது குழந்தைக்கு தாயான பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தமையால் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பகுதியை சேர்ந்த சோபியா சாம் (33) என்ற பெண்ணுக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,

கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்ரஹாம் தனது வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.மாரடைப்பில் ஆப்ரஹாம் இறந்துவிட்டதாக நாடகமாடிய சோபியா, கேரளாவுக்கு சென்று சடங்குகளை செய்துள்ளார்.இந்நிலையில் பிரேத பரிசோதனையில், ஆப்ரஹாமின் ரத்தம் மற்றும் கல்லீரலில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசார் விசாரணை நடத்தியதில், பத்து மாதங்கள் கழித்து சோபியாவும், அருண் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.திருமணத்துக்கு முன்னரே அருணுடன் பழகி வந்த சோபியா, திருமணத்துக்கு பின்னரும் அந்த உறவை தொடர்ந்துள்ளார்.இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆப்ரஹாமை திட்டம்போட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சோபியாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அருணுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஆப்ரஹாமின் மகன், சோபியாவின் சகோதரியின் மேற்பார்வையில் விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.