இளைஞரை அடித்துக் கொலை செய்த பெண்கள் : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

438

திருப்பத்தூர்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  பூங்குளம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி மற்றும் தமிழரசன் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரளி திடீரென மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து வழக்கம்போல் நிலத்தில் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த தமிழரசனுக்கும் முரளியின் மனைவி மேகலா உள்பட 4 பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இந்த தகராறில் 4 பேரும் இணைந்து தமிழரசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த தமிழரசன் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். பின்னர் தமிழரசனை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழரசனை தாக்கி கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல் நிலையத்தை 100-க்கும் அதிகமான உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பிறகு குற்றவாளிகளை கைது செய்யாமல் தமிழரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லக்கூடாது என அவர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேகலா உள்பட 4 பேரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். இதனால் தமிழரசனின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.