பள்ளிக்கு சென்ற 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு திடீரென நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

585

மதுரை…

மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சந்தோஷை சக மாணவர்களுடன் சேர்ந்து மேஜையை தூக்க சொல்லியுள்ளார். அப்போது சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்கள் சந்தோஷை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

அங்கு சந்தோசை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷின்பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.