சந்தேகத்தின் உச்சம்… பரிதாபமாக உயிரிழந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

246

திருப்பூர்….

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (31). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.

குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், தனலட்சுமி தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் செல்போன் மூலம் தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகமடைந்து அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.

இதுதொடர்பான சண்டையில், நேற்று இரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளை கொண்டு தனலட்சுமி கழுத்தை குமார் அறுத்துள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வேலம்பாளையம் போலீசார் குமாரை கைது செய்து தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குமார் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். இதனை தொடர்ந்து வேலம்பாளையம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.