தன்னை ஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை அடித்து உதைத்த நடிகை!!

1025

ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகை ஒருவர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்த ஆசிரியரை அடித்து உதைத்துள்ளார்

விஜய் பிரகாஷ் என்ற பயணி, தன்னுடைய பயணம் செய்த சின்னத்திரை துணை நடிகை ஒருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதனை கண்காணித்த நடிகை, அவரது செல்போனிலிருந்து அவற்றை நீக்குமாறு விஜய் பிரகாஷிடம் கூறியுள்ளார். ஆனால், தான் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை, அவரை சரமாரியாக நடிகை தாக்கினார். பின்னர் நடிகையுடன் சேர்ந்து வந்த துணை நடிகர் சையத் அன்வர் விமான நிலைய பொலிசாரிடம் இதுதொடர்பாக புகார் செய்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசார் அந்த ஆசிரியரின் தொலைபேசியை பார்த்த போது பல கோணத்தில் அவர் அந்த நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கல்லூரி ஆசிரியரை எச்சரித்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.