மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த மாணவன் : பெட்ரோல் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம்!!

1095

இந்தியாவில் மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த சக மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பிளஸ் 2 மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அன்கபூபல்லியைச் சேர்ந்த தம்பதி சேகர்-வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ரவிதேஜா (12) என்ற மகன் உள்ளார்.

ரவிதேஜா அங்கிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம்வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளி சுற்றுச்சுவர் அருகே ரவிதேஜா உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அலறி துடித்துக் கொண்டிருந்தான்.

இதைக் கண்ட சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து மாணவனை ஆசிரியர்கள் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிதேஜாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது. நான் கழிவறைக்கு செல்வதற்காக காம்பவுண்ட் அருகே நின்றிருந்தேன். அப்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், தன்னிடம் ஒரு காதல் கடிதம் ஒன்றை கொடுத்து, அங்குள்ள ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் கொடுக்கும்படி கூறினார்.

நான் மறுத்து கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டதால், ஆத்திரத்தில் அவன் என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டான் என்று கூறியுள்ளார்.

அதன் பின் தலைமறைவாக இருந்த பிளஸ் 2 மாணவனை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.