நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள் : அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!!

617

 

நாமக்கல் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி சகோதரர்கள் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், வாழையில் முட்டை, குங்குமம் மற்றும் இதர பூஜை பொருட்கள் வைக்கப்பட்ட நிலையில், அருகில் இருவரின் சடலங்களும் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார், அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி ஆராயும்பொழுது, மஞ்சள் பை ஒன்றில் சிவப்பிரகாசம் என்பவரின் புகைப்படம் இருந்துள்ளது.
அதை கைப்பற்றிய காவல்துறையினர் புகைப்படத்தில் இருப்பவர் குறித்து விசாரணையை மேற்கொள்ளும்பொழுது, காலையில் சாமியார் வேடத்தில் வந்து, சகோதரர்களுக்கு யாரோ செய்வினை வைத்திருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி அழைத்து சென்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து சிவப்பிரகாசத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணன் என்பவருக்கும், கொலைசெய்யப்பட்ட சகோதரர்கள் முத்துசாமி, சீரங்கனுக்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அவர் கொடுத்த திட்டத்தின் அடிப்படையிலே கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து கிருஷ்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.