கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் மரண வீட்டிற்கு சென்று செல்பி எடுத்த பிரபல நடிகர்!!

985

மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது.

இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார்.

கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும்விதமாக அக்கல்லூரியின் சுவரில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட தகராறில், அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மதவாதிகள்.

கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.பி.யும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி மாணவர் அபிமன்யுவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். ஆறுதல் கூறிவிட்டு வெளியே வருகையில் அவரைக் காண வந்திருந்த தொண்டர்களுடன் சிரித்தபடி சுரேஷ் கோபி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மரண வீட்டில் செல்ஃபி எடுத்ததற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.