கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.இவர் சீரியலில் இருந்து நின்றதும் பலர் வருத்தப்பட்டனர்.
ஆனால் அவர் மேயாத மான் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தார்.இந்த நேரத்தில் பிரியா யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டார் செய்திகள் பரவின.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், எல்லாமே வதந்தி தான், நான் திருட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.திருமணம் செய்வதாக இருந்தால் ஊரை கூட்டி சந்தோஷமாக செய்துகொள்வேன் என்றார்.