ஜோதிடம் பார்க்க வந்தவரின் மனைவியை காதல் வலையில் வீழ்த்திய ஜோதிடர் : நடந்த விபரீத சம்பவம்!!

1532

தமிழகத்தில் இளம் பெண்ணின் கணவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சிந்தாமணியூரை சேர்ந்தவர் சுந்தரம். பிரபல ஜோதிடரான இவரிடம், தன்னுடைய குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்காக பண்ணபட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் மனைவி அலமேலுவுடன் சென்றுள்ளார்.

அப்போது ஜோதிடரான சுந்தரம், சுரேஷிடம் முதலில் பேச்சுக் கொடுத்து, அவர்களின் குடும்ப பிரச்சனைக்கு முதல் காரணமாக அவரின் குடி தான் என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து குடிபழக்கத்தை மறக்கடிக்க பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, அலமேலுவுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சுரேஷ் வீட்டில் இல்லாத போது அவரது மனைவி அலமேலுவை சந்திப்பதை வாடிக்கையாக்கி கொண்ட சுந்தரம், அதைவைத்து அலமேலுவை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இந்த விவகாரம் அலமேலுவின் கணவருக்கு தெரியவந்ததால், அவர் உடனடியாக அலமேலுவை அடித்து உடைத்ததுடன், ஜோதிடரை சந்திக்க போகக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அப்போது அலமேலும் தன்னுடை கணவரை தீர்த்து கட்டினால் தான் இதற்கு எல்லாம் முடிவு பிறக்கும் என்று ஜோதிடரிடம் கூற, உடனடியாக கடந்த 6-ஆம் மதுவாங்கி தருவதாக கூறி சுரேசை ஜோதிடர் அழைத்துச் சென்றுள்ளார்.

அளவுக்கு அதிகமாக சுரேஷ் மது அருந்தியதால், தனது கூட்டாளிகளை வைத்து அவரை கொலை செய்துள்ளார்.

அதன் பின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு ஜோதிடர் தலைமறைவாகியிருந்த நிலையில், இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரியவந்ததால், எங்கே நாம் சிக்கிவிடுவோமோ என்று எண்ணி ஜோதிடர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் ஜோதிடரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அலமேலு மற்றும் ஜோதிடரின் கூட்டாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தற்போது ஜோதிடர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும், ஏற்கனவே அவர் சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக சிறை சென்றவர் எனவும் கூறப்படுகிறது.