நவீனுடன் திருமணம்.. காரணம் முதல் மனைவி திவ்யா தான்! பரபரப்பு பேட்டி

1226

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல தொலைக்காட்சி புகழ் நவீன் மீது குற்றம்சாட்டினார் திவ்யலட்சுமி.நவீனுக்கு நடக்கவிருந்த திருமணத்தையும் அதிரடியாக நிறுத்தினார்.இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவர, கிருஷ்ணகுமாரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளிக்காட்டவுள்ளதாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் பிறந்தது மலேசியா, அப்பா லாரி டிரைவர், அம்மா குடும்பத்தலைவி.நானும், என் அக்காவும் சம்பாதிச்சு தான் குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்கோம், சான்டி மாஸ்டர் மூலம் நவீனின் அறிமுகம் கிடைத்தது, நான் ஏற்கனவே நவீனின் மிகப்பெரிய ரசிகை.

என் அக்கா திருமணத்தின் போது நவீனின் குடும்பம் மலேசியாவுக்கு வந்தது, அப்போது தான் அவர்கள் எங்களது உறவுக்காரர்கள் என்றே தெரியவந்தது.அவருக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடப்பது வரை எனக்கு தெரியும், ரெண்டு பேரும் நண்பர்களாக பழகினோம், நான் தமிழ்நாட்டு வந்தபோது சான்டியின் திருமணம் நடந்தது.அப்போது எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டேன், அதை பார்த்து திவ்யா மெசேஜ் பண்ணினார்.

காலையில் எழுந்தா என்னையும், நவீனையும் பற்றி தவறாக போட்டிருந்தாங்க, அதைப்பார்த்து என் சொந்தக்காரரங்க கேவலமா பேச ஆரம்பிச்சிட்டாங்க, நவீன் என் அப்பா, அம்மாகிட்ட பேசி கல்யாணம் செய்துகிறதா சொன்னார், வேறு வழியே இல்லாம தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம்.

நவீனை மாதிரி ஒரு நல்ல பையனை பார்த்தது இல்லை, திவ்யாவுக்கு தான் நன்றி சொல்லணும், என்ன பிரச்சனை வந்தாலும் நவீனை கல்யாணம் செய்வது உறுதி என தெரிவித்துள்ளார்.