காதல் கணவனை கொலை செய்த பெண் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

381

திருச்சி….

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(27). இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் கலெக்‌ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா(26).

இருவரும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

4 வருடங்களாக இல்லற வாழ்க்கை இனிமையாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால், மன உளைச்சலில் காணப்பட்ட தினேஷ் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும் லாவண்யாவிடம் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவன் தினேஷ் குடிபோதையில் வீட்டின் சமையலறையில் உள்ளே சென்று கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவி லாவண்யாவின் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதை கண்டதும் கணவனிடமிருந்து கத்தியைப் பிடுங்க முயற்சித்தார். இதில் எதிர்பாராதவிதமாக தினேஷின் நெஞ்சில் கத்தி குத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக கணவனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு வந்த மருத்துவர்கள் தினேஷை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கணவன் நெஞ்சில் குத்திய லாவண்யா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், வேண்டுமென்றே கணவர் தினேஷை மனைவி லாவண்யா கொலை செய்தாரா? எதிர்பாராத விதமாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.